Sunday, June 15, 2008


டாக்டர்களால் சிரிப்போம்!
=============================
"நெஞ்சு வலியால உங்க துடிச்சிப்போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.
....நீங்க கவனிக்கலையா மேடம்?"
" டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!"

"என் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்.....அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன் ஒரு ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?"
" அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல
அதை பலி குடுத்துட்டு...............அப்புறம்தான் நீங்க!"

"ஐயோ...இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?"
"பயப்படாதீங்க!...ஆபரேஷன் ச்க்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!"
"பெயிலியர் ஆச்சுன்னா...?"
" உங்க 'பாடி'க்குத்தான் சார்!"

"என்னை சீக்கிரம் காப்பாத்தணும்னு உங்களுக்கு இருக்கற அக்கறை அந்த நர்சுக்கு
இல்லே பாருங்க டாக்டர்!"
"எப்படிச் சொல்றீங்க?"
"பாருங்களேன்.....எனக்கு ஏறிக்கிட்டு இருக்கற ரத்தம் சீக்கிரமா ஏறக்கூடாதுன்னு, 'சொட்டுச் சொட்டா' விழறமாதிரி திருப்பி வச்சுட்டுப் போவுது அந்தப்பொண்ணு!"

"நீங்கதான் என்னை வாழவைக்கிற தெய்வம்னு, உங்க கால்'ல விழுந்து கும்பிட்டுட்டுப் போறாரே....அவர் யார் டாக்டர்?"
"நம்ம ஊரு சுடுகாட்டுல 'வெட்டியான்' வேலை பாக்கற ஆளுங்க!"
-------------------------------------------------------------------------
- மங்களம் மைந்தன், திருச்சிராப்பள்ளி.

1 Comments:

At June 15, 2008 at 10:34 AM , Blogger அகரம் அமுதா said...

///"நெஞ்சு வலியால உங்க துடிச்சிப்போய் அம்மா..அம்மான்னு கத்தினாராமே.....நீங்க கவனிக்கலையா மேடம்?"
" டிவி சீரியல் பாத்துக்கிட்டு இருந்தப்ப, வாசல்ல ராப்பிச்சை எவனும் கத்தறானோன்னு கண்டுக்காம இருந்துட்டேன் டாக்டர்!///

கொலையும் செய்வாள் பத்தினி!

"என் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்.....அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன் ஒரு ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?"
" அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல அதை பலி குடுத்துட்டு...............அப்புறம்தான் நீங்க!"

"ஐயோ...இதென்ன, பூமாலையை இங்கே ரெடியா வச்சிருக்கீங்க சிஸ்டர்?"
"பயப்படாதீங்க!...ஆபரேஷன் ச்க்ஸஸ் ஆயிடுச்சுன்னா டாக்டர் எடுத்து தன் கழுத்துல போட்டுப்பார்!"
"பெயிலியர் ஆச்சுன்னா...?"
" உங்க 'பாடி'க்குத்தான் சார்!"

அடப்பாவிகளா! இவங்கள நம்பி எப்டி ஒடம்ப காட்றது? உம்!

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home