Tuesday, May 27, 2008

போலீஸ் கான்டபிளும், இன்ஸ்பெக்டரும்

(போலீஸ் கான்டபிளும், இன்ஸ்பெக்டரும்)
"கத்தியை கீழே எறியவச்சு, இனிமே அதைத் தொடவே
மாட்டேன்னு அந்த ரௌடிக்கிட்ட சத்தியம் வாங்கிட்டேன் சார்!"
"அதுசரி, உங்க கால்ல என்ன வெட்டுக் காயம்?"
"என் கால்ல வெட்டு விழறமாதிரி அதை வீசி எறிஞ்சுட்டான் சார்!"
-------------------------------------------------------------------------------
(கிளர்க்கும், ஆபீஸ் மேனேஜரும்)
"நம்ம கம்பெனில மாசா மாசம் தண்டச்செலவை நிறுத்தற
ஐடியாவே உங்களுக்கு இல்லையா சார்?"
" அதுக்காக, உங்களை ராஜினாமா பண்ணச்சொல்ல முடியுமா சார்?"
----------------------------------------------------------------------------------------------------------------------
"நேத்துத்தான் யாருக்கோ பாராட்டு கூட்டம் நடத்துனீங்க...
இன்னிக்கு யாருக்கு இந்த 'இரங்கற்கூட்டம்'?"
"அவருக்கேதான் சார்!..........நேத்து எல்லாரும் அவரை ஓவரா
பாராட்டுனதுல, 'அட்டாக்' வந்து இன்னிக்கு செத்துப்போயிட்டாரே!"
----------------------------------------------------------------------------
மங்களம் மைந்தன்" திருச்சி - 13.

3 Comments:

At May 28, 2008 at 4:22 AM , Blogger அகரம் அமுதா said...

சார்! உண்மையச் சொல்லுங்க அந்த கிளர்க்கு நீங்க தானே!

 
At May 28, 2008 at 4:56 PM , Blogger GIRIJAMANAALAN said...

ரொம்ப புகழாதீங்க அமுதா, கூ......ச்சமா இருக்கு!

‍ > கிரிஜா மணாளன்

 
At June 10, 2008 at 7:45 PM , Blogger லதானந்த் said...

ரொம்ப நல்லாருக்கு உங்க பிளாக்கு. சின்ன வயசிலிருந்தே உங்க நகைசுவை ஆக்கங்களைப் படித்து வருகிறேன்.

உங்களைப் போன்ற சீனியர்களை அடியொற்றி
www.lathananthpakkam.blogspot.com ல் நானும் கொஞ்சம் எழுதிவருகிறேன். டைம் கெடைக்கிறபோப் படிச்சுப் பாருங்க

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home